கடலோடு அலையாகிறேன் !
கரை தீண்டும் நுரையாகிறேன் !
வானோடு முகிலாகிறேன் !
முகில் சிந்தும் மழையாகிறேன் !
பூவோடு மணமாகிறேன் !
மணம் வீசும் மலராகிறேன் !
விண்ணோடு நிலவாகிறேன் !
நிலவோடு ஒளியாகிறேன் !
காற்றோடு கதையாகிறேன் !
கதையோடு கருவாகிறேன் !
மண்ணோடு மரமாகிறேன் !
அனைத்தும் நானாகிறேன் !
No comments:
Post a Comment