கற்சிலைக்கும் உயிர்க்கொடுத்தான்
காவேரிக் கரையோரம் நெல் விதைத்தான்!
காலத்தால் அழியாத கலைகள்
பல வளர்த்தான் !
பாரெங்கும் போற்றும் பண்பாடும்
இவனுடைய தன்றோ!
கடல் கடந்து முதலில் வாணிபம் செய்த
கடல் அரசனும் இவனன்றோ!
பழமொழிக்குள் பல கதைகள் வைத்து ,
கதைகளுக்குள் பல விஞ்ஞானத்தை வைத்துத்
தன் தலைமுறைகளுக்கு
உணர்த்தியத் தலைவன் இவனன்றோ !
வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம்
விஞ்ஞானம் கட்டிடக்கலை ஓவியக்கலை
முத்தமிழென இவன் அறிந்திருந்த
அறிவியல் தான் எத்தனை ! எத்தனை !
தாய்க்கு இணையான மரியாதையைத் தன்
தாய் மொழிக்கல்லவா கொடுத்தான் !
சொல்லிலும் செயலிலும் வீரம் கொண்டவன் !
உலகெங்கும் படையெடுத்தது வெற்றி கண்டவன் !
தன்னைப் படைத்த இறைவன் மீது
இவன் கொண்ட அன்பைச் சொல்ல
இவன் எழுப்பிய கோவில்களும், கோபுரங்களும்
செதுக்கி வைத்தச் சிற்பங்களும் தான் எத்தனை !
எண்ணற்ற மன்னர்களும் வீரர்களும்
ஞானிகளும் புலவர்களும் சித்தர்களும் வாழ்ந்த
இந்த புனித மண்ணில் ,
இம்மண்ணின் மைந்தர்களோ ! இன்று
அந்நியனின் அடிமை என்னும் போர்வைக்குள்
தெரிந்தே சிக்கிக்கொண்டுள்ளனர் !
தம் தாய் மண்ணின்
பழமையையும் பண்பாட்டையும்,
கல்வியையும் கலாச்சாரத்தையும்,
மருத்துவத்தையும் அறிவியலையும்,
இன்று மூட நம்பிக்கை என்னும்
மாய வலைக்குள் அடைத்துவிட்டு,
அந்நியனின் முட்டாள் தனத்திற்கு
அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் !
பெற்றக் கல்வியும் அறிவும் இங்கே
பொய்யாய்ப் போக ,
அடிமைத்தனமும் அறியாமையும்
உச்சத்தை எட்டிவிட்டது !
எங்கே போனது? எம் தமிழ் மக்களின்
வீரமும் அன்பும் பண்பும்
அறிவும் திறமையும் ?
காற்றில் எழுதப்பட்ட வரிகளெனக்
கரைந்து விடவா, எம் மக்கள்
கல்வெட்டுகள் செப்பேடுகளென
செதுக்கி வைத்தனர் ?
போதும் அந்நியனின் மாய வலைக்குள்
கட்டுண்டு தவித்தது .
வரலாற்றைத் தேடு, நீ யார் என்று தெரியும்!
உன் வீரம் , திறமை , பலம்
என்ன என்று புரியும் !
எழுந்து வா ! எதிரிகளே இல்லாமல் செய்வோம் !
நம் தமிழ் உலகை ஆளட்டும்!
நம் தமிழ் மக்கள் உலகைக் காக்கட்டும் !
காவேரிக் கரையோரம் நெல் விதைத்தான்!
காலத்தால் அழியாத கலைகள்
பல வளர்த்தான் !
பாரெங்கும் போற்றும் பண்பாடும்
இவனுடைய தன்றோ!
கடல் கடந்து முதலில் வாணிபம் செய்த
கடல் அரசனும் இவனன்றோ!
பழமொழிக்குள் பல கதைகள் வைத்து ,
கதைகளுக்குள் பல விஞ்ஞானத்தை வைத்துத்
தன் தலைமுறைகளுக்கு
உணர்த்தியத் தலைவன் இவனன்றோ !
வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம்
விஞ்ஞானம் கட்டிடக்கலை ஓவியக்கலை
முத்தமிழென இவன் அறிந்திருந்த
அறிவியல் தான் எத்தனை ! எத்தனை !
தாய்க்கு இணையான மரியாதையைத் தன்
தாய் மொழிக்கல்லவா கொடுத்தான் !
சொல்லிலும் செயலிலும் வீரம் கொண்டவன் !
உலகெங்கும் படையெடுத்தது வெற்றி கண்டவன் !
தன்னைப் படைத்த இறைவன் மீது
இவன் கொண்ட அன்பைச் சொல்ல
இவன் எழுப்பிய கோவில்களும், கோபுரங்களும்
செதுக்கி வைத்தச் சிற்பங்களும் தான் எத்தனை !
எண்ணற்ற மன்னர்களும் வீரர்களும்
ஞானிகளும் புலவர்களும் சித்தர்களும் வாழ்ந்த
இந்த புனித மண்ணில் ,
இம்மண்ணின் மைந்தர்களோ ! இன்று
அந்நியனின் அடிமை என்னும் போர்வைக்குள்
தெரிந்தே சிக்கிக்கொண்டுள்ளனர் !
தம் தாய் மண்ணின்
பழமையையும் பண்பாட்டையும்,
கல்வியையும் கலாச்சாரத்தையும்,
மருத்துவத்தையும் அறிவியலையும்,
இன்று மூட நம்பிக்கை என்னும்
மாய வலைக்குள் அடைத்துவிட்டு,
அந்நியனின் முட்டாள் தனத்திற்கு
அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் !
பெற்றக் கல்வியும் அறிவும் இங்கே
பொய்யாய்ப் போக ,
அடிமைத்தனமும் அறியாமையும்
உச்சத்தை எட்டிவிட்டது !
எங்கே போனது? எம் தமிழ் மக்களின்
வீரமும் அன்பும் பண்பும்
அறிவும் திறமையும் ?
காற்றில் எழுதப்பட்ட வரிகளெனக்
கரைந்து விடவா, எம் மக்கள்
கல்வெட்டுகள் செப்பேடுகளென
செதுக்கி வைத்தனர் ?
போதும் அந்நியனின் மாய வலைக்குள்
கட்டுண்டு தவித்தது .
வரலாற்றைத் தேடு, நீ யார் என்று தெரியும்!
உன் வீரம் , திறமை , பலம்
என்ன என்று புரியும் !
எழுந்து வா ! எதிரிகளே இல்லாமல் செய்வோம் !
நம் தமிழ் உலகை ஆளட்டும்!
நம் தமிழ் மக்கள் உலகைக் காக்கட்டும் !


